மேலும் ஒரு வயோதிபர் மயங்கி வீழ்ந்து மரணம் – யாழில் இரு நாள்களில் மூவர் பரிதாப உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் பயணித்தபோது மயங்கி வீழ்ந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி, அல்வாயைச் சேர்ந்த வள்ளி சின்னத்தம்பி (வயது 61) எனும் வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வீதியில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

மயங்கி வீழ்ந்தவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் – பொன்னாலை மற்றும் பலாலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு வயோதிபர்கள் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.