ஜனாதிபதி தேர்தலுக்கு வருவேன் என ரணில் தெரிவிப்பு : தம்மிக பற்றிய கதை பொய்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) பிற்பகல் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பிரசாரம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அனைத்து அமைச்சர்களின் ஆதரவையும் கோரியுள்ளார்.

இதேவேளை, ‘பொஹொட்டு’ (மொட்டு) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கட்சி என்ற ரீதியில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டால் கட்சியின் அரசியல் குழு கூட்டப்பட வேண்டும் எனவும் கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் அரசியல் குழு கூடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.