உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு மேலும் 25 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி!

இலங்கைக்கான தமது நிதி உதவியின் இரண்டாவது தவணையாக உலக வங்கி மேலும் 25 கோடி அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளது.

அரசின் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 50 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதற்குக் கடந்த ஜூன் மாதம் உலக வங்கி அனுமதி வழங்கியிருந்தது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், வறிய மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்கள் மீதான தாக்கங்களைத் தணிப்பதற்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படுகின்றது.

இந்த நிதி உதவியின் கீழ் கடந்த ஜூன் மாதம் முதல் தவணையாக 25 கோடி அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்கியிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.