யாழில் டெங்குக் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் சாவு!

யாழ்ப்பாணத்தில் டெங்குக் காய்ச்சலால் மேலும் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூளைச் சாவடைந்திருந்தார்.

அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 71 பேர் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக இரண்டு விடுதிகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன என்றும், குழந்தை நோயாளர் விடுதி நிரம்பியுள்ளது என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை 11 மாத ஆண் குழந்தை ஒன்று டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தது. அத்துடன் கடந்த சனிக்கிழமை டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமையால் அவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.