முன்னாள் எம்.பி. தயாசிறி திசேரா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி த திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே அவர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் மலரவுள்ள கூட்டணிக்குத் தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம், நாத்தான்டி தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா கடந்த முதலாம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.