வவுனியா – வீரபுரத்தில் காணாமல்போன கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சடலமாக மீட்பு!

வவுனியா – வீரபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து வந்த மேற்படி நபர் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போன நிலையிலே நேற்று திங்கட்கிழமை மாலை விவசாய செய்கையை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரி குழியில் உள்ள நீரில் மிதந்த நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதையடுத்து, சடலம் செட்டிகுளம் பொலிஸாரால் நேற்று இரவு மீட்கப்பட்டது.

சடலத்தைத் திடீர் மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் பார்வையிட்டிருந்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் என்ற 78 வயதுடைய வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டவரார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.