சர்வதேச நாணய நிதியக் குழுவினர் இன்று இரவு இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி பிரதிநிதிகள் நாளை (11) முதல் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பொருளாதாரத்தின் அண்மைக்காலப் போக்குகளை ஆராய்வதற்காக இந்தக் குழு விஜயம் செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொண்ட பின்னர், நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளும் மேற்படி குழுவால் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.