15 வயது மாணவன் வீட்டில் சடலமாக மீட்பு.

அநுராதபுரத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மாணவர் தனது வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் படுக்கையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டள்ளது.

4 சகோதர, சகோதரிகள் உள்ள குடும்பத்தில் இளையவரான மாணவனின் உடலில் பல இடங்களில் கீறல் காயங்கள் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய சோதனையில், இறந்த மாணவனின் படுக்கையின் மெத்தையின் கீழ், போதைப்பொருள் வகை, தீப்பெட்டி, சிம் அட்டைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக அவற்றைப் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

மரணம் தொடர்பான நீதிவான் விசாரணையின் பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு பதில் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதையடுத்து பிரேத பரிசோதனைக்காகச் சடலம் தம்புள்ளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.