களுகங்கையில் மூழ்கி 3 மாணவர்கள் மரணம்! – நீராடச் சென்ற வேளை துயரம்.

களுத்துறை – களுகங்கையில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும், 17 வயதுடைய மாணவர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை, பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்று (14) இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.