கூட்டணி அமைக்க , வடிவேல் சுரேஷுக்கும் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான ஆலோசணைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இவ்வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

தற்போது நாடாளுமன்றத்தில் சுயேட்சை எம்.பி.யாக பணியாற்றி வரும் அவர், சமீபத்தில் தோட்டங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது.

அதன் தலைவர் ஜீவன் தொண்டமான் அமைச்சராகவும் தலைவர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக வடிவேல் சுரேஷும், சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் செயல்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.