வல்வெட்டித்துறை ஆகாய வெளியில் அலங்கரித்த விசித்திரமான பட்டங்கள்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தையொட்டி மாபெரும் பட்டப் போட்டி (15) யாழ்ப்பாணம், வடமராட்சி, வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திரமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டன.

மேற்படி போட்டியில் ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம் என்ற பட்டம் முதலாம் இடத்தையும், விண்வெளியில் நிலை நிறுத்திய செயற்கைக் கோள் என்ற பட்டம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.