காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சாவு!

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு அருகாமையில் நின்ற யானையை மேற்படி நபர் விரட்டியபோதே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான மஹிந்த ஜெயசிங்க (வயது 48) என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மெதிரிகிரியை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.