வாகன விபத்தில் தந்தை, மகன் பலி! – தாய் படுகாயம்.

புத்தளம், ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியில் லபுகம பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தாய் புத்தளம் வைத்தியசாலையின் தீவிர சிசிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.