பயங்கரமான விபத்தில் இரு வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பகுதியில் இன்று (30) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் பின்பகுதியில் மோதி வீதியில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆண் மற்றும் பெண் இருவரும் வெளிநாட்டவர்கள் என்பதுடன் அவர்களின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி மற்றும் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.