பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ். வைத்தியசாலையில்…

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரே மேற்படி இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்குச் செல்லாதமையால் பொலிஸார் வீதியில் வைத்து தன்னைக் கடுமையாகத் தாக்கினர் என்று பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலை பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.