ஐக்கிய மக்கள் சக்தி தனிநபர் சொத்தல்ல சஜித்தை மறைமுகமாகப் போட்டுத் தாக்கும் பொன்சேகா கட்சியில் இருந்து வெளியேறமாட்டேன் என்றும் தெரிவிப்பு.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனிநபருக்குரிய சொத்து கிடையாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியில் எமது பங்களிப்பும் உள்ளது. எனவே, கட்சியில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளதால் சரத் பொன்சேகா கடும் அதிருப்தியில் இருக்கின்றார் எனவும், கட்சியை விட்டு வெளியேறவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், தயா ரத்நாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொண்டமை தொடர்பில் கட்சித் தலைவர் மற்றும் செயலாளரிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.