வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பு.

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு அறிவித்தலை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் தலைவர் த.துசாந், செயலாளர் எஸ்.சுதர்சன், பொருளாளர் இ.வரதகுமார் மற்றும் வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் இ.தயாபரன் ஆகியோர் மேற்படி ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு மாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கடந்த காலத்தில் ஆளுநராக இருக்கும்போது வடக்கு மாகாண அரச சாரதிகளுக்கு உரிய முறையில் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என ஆர்வமாக இருந்த போதிலும் தற்போது ஆளுநராலேயே இது இடைநிறுத்தப்ட்டுள்ளது. இந்நிலையில், அனைவரும் கூடி தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்லத் தீர்மானத்துள்ளோம்.

கடந்த ஜனவரி மாதமே தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல முற்பட்டபோது ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையைக் கருத்தில்கொண்டு அந்த மாதம் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை .

இந்நிலையில், இந்த மாதம் (பெப்ரவரி) 5 ஆம் திகதி முதல் 10 திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.