மோட்டார் சைக்கிள் மோதி இருவர் பரிதாப உயிரிழப்பு – 9 மாதக் குழந்தை படுகாயம்.

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் விஹார சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் இருந்த நபர் ஒருவரையும், குழந்தை ஒன்றைச் சுமந்து சென்ற பெண் ஒருவரையும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வீதியோரத்தில் இருந்த நபரும், குழந்தையைச் சுமந்து சென்ற பெண்ணும் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணும் நபரும் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி பெண்ணின் 9 மாதக் குழந்தை படுகாயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

பண்டாரகம பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய நபரும், அடையாளம் காணப்படாத 43 வயதுடைய பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்துள்ளார். அவர் பொலிஸ் பாதுகாப்பில் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.