யாழ். மாநகர சபைக்குப் புதிய ஆணையாளர்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக ச.கிருஸ்னேந்திரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக 7 ஆண்டுகள் பதவி வகித்த த.ஜெயசீலன் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட நிலைநில் மாநகர சபையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ச.கிருஸ்னேந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை 9 மணிக்குக் கடமையைப் பொறுப்பேற்றார்.

பூநகரி மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேசங்களில் பிரதேச செயலாளராகப் பணியாற்றிய கிருஸ்னேந்திரன், இவ்வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் பெற்ற நிலையில் இன்று யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராகப் பொறுப்பேற்றார்.

இதேவேளை, யாழ். மாநகர முன்னாள் ஆணையாளர் த.ஜெயசீலன் இன்று பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளராகப் பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.