விபத்தில் சிக்கி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில் 76 பேர் சாவு!

கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த வருடம் விபத்துக்களில் சிக்கிய நிலையில் ஆயிரத்து 559 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.