கடையொன்றில் துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் காயம்.

மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடையொன்றில் நேற்று (11) இரவு கொள்ளையடிக்க வந்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.