காலி வீதியில் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

இன்று (13) பிற்பகல் பொத்துப்பிட்டி கல்லுபர தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த அமில இந்திக்க உள்ளிட்ட நான்கு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தீ விபத்தினால் கல்லுபர பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், வாத்துவ பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளால் அதனை சீர்செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.