காதலர் தினத்தில் காதலி சந்திக்க வர மறுத்தமையால் காதலன் உயிர்மாய்ப்பு.

இறக்குவானை பிரதேசத்தில் காதல் துயரத்தால் இளைஞர் ஒருவர் காதலர் தினத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இறக்குவானையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும், அவரது தந்தை கொழும்பில் பணிபுரிந்து வருகின்றார் எனவும், மேலும் இரு சகோதரிகளுடன் மேற்படி இளைஞர் வீட்டில் வசித்து வந்தார் எனவும் தெரியவந்துள்ளது.

“எனது சகோதரர், யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்து வந்த நிலையில், சம்பவத்துக்கு முன்தினம் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அந்த அழைப்பின் பின்னர் சகோதரர் சத்தமாக அழுதார். நாளை (14) காதலர் தினத்தைக் கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை எனது சகோதரர் பலமுறை அழைப்பதைக் கேட்டேன்.” – என்று இறந்தவரின் சகோதரி ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இறப்பதற்கு முன் மேற்படி இளைஞர் தனது கையைப் பிளேடால் வெட்டிக் கொண்டுள்ளார் என்றும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இந்த மரணம் தற்கொலை எனத் தெரிவித்த மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.