ராவணன் அருவியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ராவணஎல்லையை பார்வையிட வந்த நபர் ஒருவர் நேற்று (22) ராவணஎல்லை மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கம் 172/4, மொரகல்ல, பேருவளையில் வசிக்கும் 32 வயதுடைய சந்தரதுர நாதிரா மதுசங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று (22) காலை மற்றுமொரு நண்பருடன் எல்ல மலைத்தொடரில் ஏறியதாகவும், மாலை 5:30 மணியளவில் அதிலிருந்து கீழே இறங்கச் சென்ற போது, ​​கட்டில் பாறையில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் வெள்ளவாய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் வெல்லவாய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எல்ல பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.