அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாதீர்! – சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல்.

நாட்டில் அதிக வெப்பமான காலநிலையைக் கருத்தில்கொண்டு பாடசாலை மாணவர்களுக்குச் சுகாதார அமைச்சால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதைத் தவிர்க்குமாறும், மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சின் மேற்படி அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று முதல் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.