தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் இடையில் சந்திப்பு.

தமுகூ சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் திகாம்பரம், எம்பிக்கள் வேலுகுமார், உதயகுமார் ஆகியோரும், ஐகுமு சார்பில் தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்க, கருணாரட்ண பரணவிதாரண, நிசாந்த ஆகியோர் கலந்து கொண்டார்.

மனோ எம்பி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பினரும் தத்தம் கொள்கை நிலைப்பாடு ஆவணங்களை பரிமாற்றி கொண்டனர்.


கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, மலையக தமிழ் மக்கள் தொடர்பில் முற்போக்கு தமிழ் கூட்டமைப்பு முன்வைத்துள்ள பிரேரணையை ஆராய்ந்து எதிர்வரும் காலங்களில் பதிலளிப்பதாக  தெரிவித்தார்.


Leave A Reply

Your email address will not be published.