ரணிலுக்கு வேட்புமனுத் கொடுக்கப்படாவிட்டால் மொட்டை விட்டு வெளியேறுவேன் : பிரசன்ன ரணதுங்க.

மொட்டில் பலவீனமான வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்படும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவ்வாறு நடந்தால் மொட்டிலிருந்து வெளியேற தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச கேட்டால் ஆதரவளிப்பதாக கூறிய அவர், பசில் ராஜபக்ச , ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் நாமல் ராஜபக்ஷ இந்த நேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.