மாவட்ட செயலக வளாகத்தில் பொது சிரமதானப் பணி.

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் பொது சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக உற்பத்தித்திறன் பிரிவினரின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பொது சிரமதான நிகழ்வு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது களஞ்சிய அறை, ஆவணப்படுத்தல் பிரிவு, பொது இடங்கள் மற்றும் ஏலவே குறித்த பிரிவுகளிற்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் என்பன குறித்த உத்தியோகத்தர்களால் சிரமதானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.