முல்லைத்தீவு மாவட்ட சமுதாய பொலிஸ் குழுக்கூட்டம்.

முல்லைத்தீவு மாவட்ட சமுதாய பொலிஸ் குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இரண்டாவது சமுதாய பொலிஸ் கூட்டமானது இன்று வியாழக்கிழமை(24) மு.ப09.00மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கிராம பாதுகாப்பு மற்றும் பிரதேச மட்டங்களில் நடைபெறும் கூட்டங்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக கூட்டப்படும் மேற்படி கலந்துரையாடலில் சட்டவிரோத மண் அகழ்வு, நெல் உலரப்போடுதல், கட்டாக்காலி கால்நடைகள், கசிப்பு உற்பத்தி, போக்குவரத்து, சட்டவிரோத மீன்பிடி, வீட்டுவன்முறைகள், பாடசாலைகளில் ஊடுருவும் போதைப்பொருள் பாவனை, வீதியோரங்களில் புற்றடிகளில் உள்ள மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

மேலும் இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பொறுப்பான உத்தியோகத்தர்களால் நிறைவேற்றப்பட்டு அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக அடுத்த கூட்டத்தில் ஆராயப்படும்.

 

Leave A Reply

Your email address will not be published.