இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் ஆளுநரால் திறந்துவைப்பு.

யாழ்ப்பாணம், இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட நோயாளர் விடுதி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸால் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
தென்னிலங்கையை உலுக்கிய வேட்டு! ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை!!
நோயாளர் விடுதியைப் பார்வையிட்ட ஆளுநர், முதலாவது நோயாளரையும் விடுதியில் அனுமதித்தார்.

இதன்போது நிகழ்வின் பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றிய ஆளுநர்,

“வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறையை கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நோயாளர்களை அதிகரித்து சுகாதாரத்துறையை வீழ்ச்சியடைய செய்ய நான் ஒருபோதும் விரும்பவில்லை. தற்கால உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும்.

கிராமிய, பிரதேச வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது.
‘ஜான் சினா’ ஆஸ்கர் விருதுக்கு நிர்வாணமாக வந்தார்.
மேலும் இளவாலை கிராமத்துக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் எனக்கு உள்ளது. இந்த விடயங்களைக் கருத்தில்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

இளவாலை கிராம அபிவிருத்திக்காகச் செயற்படும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.