கோட்டாவின் நூலால் பஸில் கடும் கடுப்பில் – ராஜபக்ஷக்களின் பேச்சாளர் உதயங்க தகவல்.

கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள நூல் தொடர்பில் பஸில் ராஜபக்ஷ கடும் சீற்றத்துடன் இருக்கின்றார் என்று ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படுகின்ற ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், மொட்டுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி இருந்தால் கட்சியும் இன்று காணாமல்போய் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“கோட்டாபயவின் ஐந்து நூல்களைக் கொள்வனவு செய்தேன். மஹிந்த அண்ணனுக்கு ஒன்றை வழங்கினேன். பஸில் அண்ணனுக்கு வழங்குவதற்குச் சென்றபோது அவர் கோபமடைந்த நிலையில் காணப்பட்டார். இதனால் நூலை வழங்கவில்லை. திரும்பி வந்தேன்.

கோட்டாபயவின் நூலைப் பெரும்பாலானவர்கள் வாசிக்கவில்லை. இதனால் அது பற்றி தவறான அர்த்தப்படுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பஸிலும் தவறான அபிப்ராயத்தில் இருக்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன். புத்தகத்தை முறையாக வாசித்தால்தான் அதன் உள்ளடக்கம் புரியும்.

பஸில் ராஜபக்ஷவிடமும் நூல் பற்றி எவராவது தவறாக எடுத்துரைத்திருக்கலாம். அவ்வாறு கூறும்போது கோபம் வருவது நியாயமானது. ஏனெனில் கட்சித் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை எனவும், அதனால்தான் கோட்டாபயவின் ஆட்சி தோல்வி அடைந்தது எனவும் ஒருவர் பஸிலிடம் கூறியுள்ளார்.

ஜனாதிபதிப் பதவியையே விட்டு ஓடியவர், கட்சித் தலைமைத்துவத்தை வழங்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அன்று பஸில் எடுத்த முடிவு சரி என்பது இன்று புலனாகின்றது.

கோட்டாபயவின் நூல் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பம் மகிழ்ச்சியடையக் கூடிய நிலையில் இல்லை.” – என்றார்.

குடும்ப ஆட்சி இல்லையேல் மஹிந்தவே சிறந்த தலைவர் – பொன்சேகா சொல்கின்றார்.

பாராளுமன்றத்தை கலைக்க 113 உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் ஆளும் கட்சி !

Indigo Airlines யாழ் வர அனுமதி கோரியுள்ளது.

கெஹலியவின் பிணை ரத்து… விசாரணை முடியும் வரை விளக்கமறியல்!

Leave A Reply

Your email address will not be published.