கெஹலிய பிணை விண்ணப்பம் சமர்ப்பிப்பு! – திங்கள் பரிசீலனை.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

தமது பிணைக் கோரிக்கை மாளிகாகந்த நீதிவானால் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டதாகவும், நீதவானின் பிணை கோரிக்கையை நிராகரிக்கும் உத்தரவை இடைநிறுத்தி, ஏதாவதொரு நிபந்தனையின் அடிப்படையில் தம்மை பிணையில் விடுவிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரின் இந்தப் பிணைக் கோரிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை பரிசீலிக்கப்படவுள்ளது.

தரமற்ற மருந்து விநியோகம் தொடர்பான வழக்கில் கெஹலிய ரம்புக்வெல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.