தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் விபத்தில் சிக்கி மரணம்.

தலைக்கவசம் அணியாது சென்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பளையைச் சேர்ந்த சாந்தலிங்கம் நிரோசன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞன் கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவர் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

தலைக்கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி விபத்துக்குள்ளானதால் தலையில் படுகாயம் ஏற்பட்டது என்று மரண விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.