யாழ். வந்தார் ரணில் காணிகள் விடுவிப்பு – உரிமையாளர்களிடம் பத்திரங்களும் கையளிப்பு.

இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் 278 ஏக்கர் காணிகளை இன்று யாழ்ப்பாணம் வந்துள்ள ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விடுவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் காணிகள் 278 ஏக்கர் விடுவிக்கப்பட்டு அதற்கான பத்திரங்களையும் உரிமையாளர்களிடம் ஐனாதிபதி வழங்கி வைத்துள்ளார்.

இதற்கமைய ஜே/244 வயாவிளான் கிழக்கு, ஜே/245 வயாவிளான் மேற்கு, ஜே/252 பலாலி தெற்கு, ஜே/254 பலாலி வடக்கு, ஜே/253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.