ரணிலுடனான பேச்சு வெற்றி! – மொட்டுவின் ஸ்தாபகர் பஸில் தெரிவிப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சு வெற்றியடைந்தது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன், இந்தக் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.