ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை 3 வாரங்களுக்கு முன்புதான் அறிந்தேன் : மைத்திரி (Video)

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தொடர்பில் தாம் கருத்து தெரிவித்ததாக மைத்திரிபால சிறிசேன இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

திறந்த நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முடியாத அபாயத்தை சுட்டிக்காட்டி , இது தொடர்பில் இரகசிய சாட்சியமொன்றை வழங்குமாறு நீதிமன்றில் இருந்து விசேட உத்தரவு கிடைக்கப் பெற்றால், அது நிறைவேற்றப்படும் என்றார்.

திறந்த நீதிமன்றத்தில் இப்படி வெளிப்படுத்தினால், தன்னை மட்டுமல்ல, தன் குடும்பத்தையும் அழித்துவிடுவார்கள் என பயந்த தொனியில் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்களை தமக்கு தெரியும் என்றும், இது அரசியல் அல்லது வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், மிகவும் நேர்மையான கருத்தை வெளியிடுவதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.