இரு தேர்தலைகளையும் ஒரே நேரத்தில் நடத்துக! – செலவைக் குறைக்க அரசுக்கு சபாநாயகர் ஆலோசனை.

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாறு இரண்டையும் ஒன்றாக நடத்துவதால் செலவை மீதப்படுத்த முடியும் என்று கூறிய சபாநாயகர், இரண்டு தேர்தல்களையும் தனித்தனியே நடத்தினால் அதிக பணம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு இப்போது இருக்கின்ற நிலையில் இரண்டையும் ஒன்றாக நடத்துவதே சிறந்தது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.