குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்; திறந்து பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் – அதிர்ச்சி சம்பவம்!

தண்ணீர் தொட்டிக்குள் குரங்குகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நந்திகொண்டா கிராமத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து வரும் தண்ணீரில் கடந்த ஒருவாரமாக துர்நாற்றம் வீசியுள்ளது.

இதுகுறித்து நேற்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் அந்த தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீரை நிறுத்தினர். பின்னர் குரங்குகளை அப்புறப்படுத்திய பின்னர் தண்ணீரை வெளியேற்றினர். மேலும், குரங்குகள் செத்து மிதந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள், மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தினர்.

தண்ணீருக்காக உள்ளே இறங்கிய குரங்குகள், மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் போட்டியிட்டால் முழு ஆதரவு! – மொட்டு எம்.பி. வீரசிங்க கூறுகின்றார்.

தைவானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; குறைந்தது ஒன்பது பேர் பலி.

எந்த அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார்! – முல்லைத்தீவில் சஜித் தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலும் , பொதுத் தேர்தலும் ஒரே நாளில் : அவர்களுக்கு முக்கியம் அவர்களது எதிர்காலம் : உதய கம்மன்பில

அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்

Leave A Reply

Your email address will not be published.