மீண்டும் ரணிலை சந்தித்த பசில் : மாற்றமில்லா ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது நாட்டுக்கு நன்மை பயக்கும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

எனினும், ஜனாதிபதி தனது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த கலந்துரையாடலும் உடன்படிக்கையின்றி முடிவடைந்துள்ளதுடன், இவர்களுக்கிடையிலான முன்னைய கலந்துரையாடல்களும் இணக்கப்பாடு இன்றியே முடிவடைந்தன.

Leave A Reply

Your email address will not be published.