குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம் – கெபிதிகொல்லேவ – கொல்பெந்த குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 58 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

மது அருந்திய சிலர் நீராடுவதற்காக சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.