பாடம் மறந்த மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை கைது.

வவுனியா சுந்தரபுரம் கல்லூரியின் இரண்டாம் வருட மாணவனை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியைஒருவர் வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நாள் கற்பித்த பாடங்கள் ஞாபகம் வரவில்லை எனக் கூறி ஆசிரியை தாக்கியதாகவும், தாக்குதலால் மாணவனின் கண்கள், தலை மற்றும் கன்னத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பள்ளிக்குச் சென்ற பெற்றோர், தங்கள் மகனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியைச் சந்தித்து தகவல் கேட்டபோது, ஆசிரியர் பெற்றோரையும் திட்டியுள்ளார்.

பின்னர் மாணவரை சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன், வவுனியா வைத்தியசாலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகத்திற்குரிய ஆசிரியை ஈச்சங்குளம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியயை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு மேலதிகமாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வவுனியா பிராந்திய கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.