ஹொரணையில் இரட்டைக் கொலைச் சந்தேக நபரான விமானப்படை வீரர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

நேற்று (07) ஹொரணை மலோசல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனக் கூறப்படும் விமானப்படை வீரர் ஒருவர் இன்று (08) காலை பாதுக்க அங்கமுவ பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுக்க மீரியகல்ல பிரதேசத்தில் உயிரிழந்த சந்தேகநபரின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டதுடன், சந்தேகநபர் அப்போது வீட்டில் இல்லாத காரணத்தினால் அங்கமு சந்தியில் வீதித்தடையை மேற்கொண்டு வாகனங்களை சோதனையிட்டுள்ளனர்.

வாகனங்களைச் சோதனையிட்ட போது, அவ்விடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்த போதும், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை முன்னோக்கி செலுத்தி, பொலிஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். தற்காப்புக்காக பொலிஸ் அவரை நோக்கி திருப்பிச் சுட்டதில் , சந்தேக நபர் காயமடைந்து அடைந்துள்ளார். உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட பாதுக்கை மிரியகல்ல டெம்பிள் வீதிப் பகுதியைச் சேர்ந்த ராஜபக்ச பத்திரகே என்ற 33 வயதுடைய விமானப்படை கோப்ரல் டிலந்த லக்மால் ராஜபக்ஷ விமானப்படை ரகர் அணி உறுப்பினர் ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.