இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் அறிவித்துள்ளார்.

தற்போதைய மத்திய கிழக்கு இராணுவ நிலைமை காரணமாக இஸ்ரேலிய விமான சேவைகள் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இலங்கையர் எவரேனும் இஸ்ரேலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடி திகதியை மீள்திருத்தம் செய்து கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொடரும் இராணுவ மோதல்களினால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை தூதுவர் நிமல் பண்டார ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.