பிரான்சில் இருந்து வந்த யாழ்.பெண் கொரோனாவால் மரணம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ். வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மரணித்த பெண் கடந்த வாரம் பிரான்சில் இருந்து வந்து, யாழ்ப்பாணம் அராலி பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளார்.

பின்னர் கடந்த 12ஆம் திகதி கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்த நிலையில் , குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (15) கிடைக்கப்பெற்ற நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் அராலி பிரதேசத்தில் வசித்த 62 வயதுடைய பெண் என்பதுடன், குறித்த பெண் தற்காலிகமாக தங்கியிருந்த வீடு மற்றும் பெண்ணுடன் தொடர்பிலிருந்த நபர்களை சோதனையிட யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.