மக்களவை தேர்தல்: 11 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு – என்ன காரணம்?

11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் மணிப்பூர் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூர் மாநிலத்தின் 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது.

இங்குள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வாக்கு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலதிக செய்திகள்

முதலில் ஜனாதிபதித் தேர்தல்! – ரணில் உறுதி என்கிறார் வியாழேந்திரன்.

வாக்குச்சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும்! – நாமல் திட்டவட்டம்.

தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி முட்டாள்தனமானது! – அரவிந்தகுமார் கடும் எதிர்ப்பு.

இலங்கையில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை!

பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சக்கள் மீது பழி சுமத்தாதீர்கள்! – நாமல் கடும் சீற்றம்.

இரண்டு வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு ஓட்டம்!

வடமேல் மாகாண ஆளுநராக பதவியேற்கவுள்ளார் நஷீர்?

ரணில் எந்தப் பக்கத்தில் நின்றாலும் தமிழர்களின் வாக்குகள் அவருக்கே! – டிலானின் கருத்துக்கு வஜிர பதிலடி.

‘எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும்’,ஈரான் வெளியுறவு அமைச்சர்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மாரடைப்பால் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்

Leave A Reply

Your email address will not be published.