அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் நீடிப்பு.

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்காகவே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் திரு.ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.

இதனால், அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருந்ததுடன், காலத்தை நீடிக்குமாறு பிரதேச செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.