88-89 JVPயால் கொல்லப்பட்டோர் , பெண் பித்தர்கள், கள்ள சாராயம் காச்சியோர் , திருடர்கள்..- நளின் ஹெவகே (Video)

88-89 பயங்கரவாத காலத்தில் JVPயால் கொல்லப்பட்டவர்கள் கற்பழிப்பாளர்கள், கள்ள சாராயம் காச்சுவோர் மற்றும் திருடர்கள் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நளின் ஹெவகே ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற பலய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவாத அரங்கில் கருத்து தெரிவித்த போது, விவாத மேடையில் பெரும் சர்ச்சை எழுந்தது.

அந்த பேச்சு வெளிப்பட்டதும் , ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் டபிள்யூ.டி. வீரசிங்க எம்.பி.க்கள் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

எம்.பி வீரசிங்க, தனது தந்தையும் அக்காலத்தின் போது கொல்லப்பட்ட நபர் என்றும், ஹேவகேவின் கூற்றுப்படி, தனது தந்தையும் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததால் கொலை செய்யப்பட்டாரா என கேள்வி எழுப்பி வாதிக்கத் தொடங்கினார்.

இறுதியில் , நிகழ்ச்சி முழுமையான குழப்பம் போல் ஆகி நளின் ஹெவகே விவாத மேடையை விட்டு வெளியேறினார்.

Leave A Reply

Your email address will not be published.