ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்த நாட்டை மீட்க முடியும் – வஜிர அபேவர்தன

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்த நாட்டை மீட்க முடியும். அவரின் பயணப் பாதையை மாற்ற முற்பட்டால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம்தான் உருவாகும்.”

வீழ்ந்த நாட்டை மீட்டெடுத்துவரும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். உலகில் நாடொன்று வங்குரோத்தடைந்தால் மீண்டுவர 8 முதல் 10 ஆண்டுகள்வரை செல்லும். எனினும், குறுகிய காலப்பகுதிக்குள் வங்குரோத்து அடைந்த எமது நாட்டை சீரான நிலைக்கு ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார். மே நடுப்பகுதியளவில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக மீண்ட பின்னர் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும்.

தற்போது எமக்கு வேறு வழியில்லை. ஒரே வழிதான் உள்ளது. அந்த வழியை மாற்றக்கூடாது. அவ்வாறு மாற்றினால் மீண்டும் வரிசை யுகம்தான் உருவாகும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.