வாகன உரிமம் கேட்கும் 150 எம்.பி.க்கள்.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு சுமார் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த எம்.பி.க்கள் மற்றும் இளைய எம்.பி.க்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.

குறித்த கடிதத்தை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் அவர் சுயமாக முடிவெடுக்கக் கூடிய விடயம் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.