புங்குடுதீவு வைத்தியசாலைக்கு அருகாமையில் மனித எலும்புகள்.

யாழ்.புங்குடுதீவு வைத்தியசாலைக்கு அருகாமையில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊர்க்காவத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று குறித்த இடத்தில் அகழ்வு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு ஊர்க்காவடுதுறை மாவட்ட நீதிபதி திருமதி நளினி சுபாகரன் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி சி. பிரணவன் ஆகியோர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த இடத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்று புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அஸ்திவாரம் வெட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணியின் போது இந்த மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.